இந்த வேலைகளை ஏஐ-யால் செய்யவே முடியாது - மைக்ரோசாப்ட் வெளியிட்ட பட்டியல்
தகவல் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சியை செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திவிட்டது. செயற்கை நுண்ணறிவை பல முன்னணி நிறுவனங்களும் பயன்படுத்த தொடங்கியிருப்பதால் மென்பொருள் துறையில் வேலை இழப்புகள் தற்போதே ஆரம்பித்துவிட்டன. இதனால், வரும் ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்குமோ என அச்சம் ஐடி துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஐடி துறையினர் மட்டுமின்றி பல துறைகளிலும் ஏஐ புகுந்து விளையாடும் என்று சொல்லப்படுவதால் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். அதேவேளையில் ஏஐ பயன்பாடு காரணமாக வேலையின் திறன் கூடும் எனவும் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் செய்யும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இதற்கிடையே ஏஐ வருகையால் எந்த துறைகளில் எல்லாம் வேலை இழப்பு ஏற்படும் எவை எல்லாம் பாதிக்கப்படாது? என்ற ஆய்வறிக்கையை மைக்ரோசாப்ட் நடத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நடத்திய ஆய்வில், செவிலியர், மக்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுப்பது, தீயணைப்பு பணி, எலக்ட்ரிஷியன் பணி, கப்பல் பொறியாளர்கள், டயர் பழுதுபார்ப்பவர்கள் , உள்ளிட்ட பணிகளை ஏஐ செய்ய முடியாது எனத்தெரிவித்துள்ளது. சில வேலைகளில் கண்டிப்பாக மனிதர்களின் ஈடுபாடு கட்டாயம் தேவைப்படும் அதை எக்காரணத்தை கொண்டும் ஏஐ தொழில்நுட்பத்தில் முழுவதுமாக ஒப்படைத்துவிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
